Saturday, March 21, 2015

பொய் வாழ்வு

வேடிக்கை விளையாட்டு
சிலர் வாழ்க்கை இவ்வுலகில்
காதல் பகையாக,
பகை அன்பாக,
மாறுவதேனோ!
தவம்போல் வேடமிடும்
மனிதரும் இங்கே
உயிர்தர தயங்கா
நண்பருமே....

புன்சிரிப்பில் மயக்கி
தேன் சொல்லில் ஈர்த்து
பொய் வாழ்வு கொண்டு
என்ன அடைந்தார் என்றே?!
சித்தம் குழம்ப
பின் தெளிந்தது மனம்

இதுவும் நாடகமே!!!

No comments:

Post a Comment